About The Product:
வாழ்க்கையில் மழலைப் பருவம் மகிழ்ச்சியுடன் கூடியது. இளமைப் பருவம் நண்பர்களுடன் கழிப்பது. வாலிபப் பருவத்தில் நமக்கெனக் குடும்பத்தை அமைத்துக் கொடுப்பார்கள். பின்னர், நமக்கென குடும்பப் பொறுப்புகள் கூடும். அடுத்த தலைமுறையையும், நமக்கு முந்தைய தலைமுறையையும் கவனித்துக்கொள்ள வேண்டிவரும். நம் கண்முன்னே நம் மழலையையும், பெற்றோர்களாக முதியவர்களையும் காணும் இக்காலக் கட்டத்தில்தான் வாழ்க்கை தன் புதிர்களை அவிழ்த்துவிடும். இரண்டு தலைமுறைக்கும் இடையில் இடைவெளிதான் எவ்வளவு? இதைச் சமாளிக்கும் மனப்பக்குவம் கொண்டவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். கூட்டுக்குடும்பமுறை சிதைந்துபோனதும், கணவன் மனைவி இருவரும் குடும்பப் பொருளாதார நிலையை மேம்படுத்த, பணிக்குச் செல்லுதல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் முதியோர் இந்தியாவைப் பொறுத்தவரை நவீன மருத்துவ வசதிகள் நன்கு கிடைக்க வாய்ப்புகள் ஏராளம். ஆனால், அவற்றை வாங்கும் சக்தி கொண்டோர் வெகுசிலரே. இங்குதான் முதுமைக்கு சிக்கல் உருவாகிறது. வாழ்தல் வேறு, இருத்தல் வேறு என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பெற்ற பிள்ளைகளால் அநாதையாக்கப்பட்ட பெற்றோர்களும், பெற்றோர்களால் அநாதையாக்கப்பட்ட பிள்ளைகளும் தற்போதைய சமூகத்தில் ஏராளம். பெற்றோரைப் பிள்ளைகள் பாதுகாக்க வேண்டிய அணுகுமுறைகள் பற்றியும், பெற்றோர்கள் தங்கள் முதுமைக் காலத்தில் கையாள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் இப்புத்தகம் ஆழமான வழிகாட்டலை வழங்குகிறது.
Product Details:
Legal Disclaimer : Product color may slightly vary due to photographic lighting sources or your monitor settings.